• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தில் 4.௦ ரிக்டர் அளவு நிலநடுக்கம்

March 6, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) 4.௦ ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

இது குறித்து அதிகாரி கூறுகையில்,

“குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.3௦ மணியளவில் 4.௦ ரிக்டர் அளவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறியுனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்தோ பொருட் சேதம் குறித்தோ தகவல் வெளியாகவில்லை” என்றார்.

“4.௦ ரிக்டர் அளவு நிலநடுக்கம், கட்ச் மாவட்டத்திலிலுள்ள ராப்பர் நகரிலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது” என்று காந்திநகர் நிலநடுக்க ஆராய்ச்சி மையத்தின் அதிகாரி தெரிவித்தார்.

“ராஜபார் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அதன் அருகிலிருந்த பாச்சாவு நகர் வரை உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தேசிய பேரிடர் படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராப்பர் மற்றும் பாச்சாவு நகரங்களுக்கு இரண்டு அணிகளை அனுப்பியுள்ளது” என்று கட்ச் மாவட்டத்தின் ஆளுநர் எம்.ஏ. காந்தி தெரிவித்தார்.

மேலும் படிக்க