• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாசிப்பருப்பு பர்பி

October 2, 2018 koodal.com

தேவையான பொருட்கள்:

வறுத்த பாசிப்பருப்பு மாவு – 1 கப்.

சர்க்கரை – 2 கப்.

நெய் – 3/4 கப்.

செய்முறை:

சர்க்கரை மூழ்கும் அளவு நீர் விட்டு ஒரு பாத்திரத்தில் ஒற்றை கம்பி பாகு வரும் வரை காய்ச்சவும்.
இன்னொரு அடுப்பில் சிறு தீயில் நெய்யை சூடாக்கவும்.கம்பி பாகு வந்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி நன்கு கிளறி இறக்கவும்.

ஒரு கரண்டியால் சூடான நெய்யை மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி நன்கு கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.உடனே ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.

குறிப்பு:

கடையில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பு மாவை உபயோகித்தால் நன்றாகயிருக்கும்.ஒற்றை கம்பி பதம் என்பது 2 விரல்களுக்கிடையே ஒற்றை இழைபோல வரும். அதுதான் பர்பி செய்ய சரியான பதம்.தூளாக வந்த பர்பியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி லட்டுகளாக பிடிக்கவும்.

மேலும் படிக்க