• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு ஊழியர் ஊதியத்தை மாற்றியமைக்க புதிய குழு: முதல்வர்

February 22, 2017 தண்டோரா குழு

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க புதிய குழு அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏழாவது ஊதியக் குழு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதையடுத்து, 5 பேர் கொண்ட தனிக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்தக் குழுவில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், நிதித் துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவர். மேலும், அந்தக் குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை ஜூன் 30ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க