• Download mobile app
02 May 2026, SaturdayEdition - 3734
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு ஊழியர் ஊதியத்தை மாற்றியமைக்க புதிய குழு: முதல்வர்

February 22, 2017 தண்டோரா குழு

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க புதிய குழு அமைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஏழாவது ஊதியக் குழு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதையடுத்து, 5 பேர் கொண்ட தனிக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்தக் குழுவில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், நிதித் துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவர். மேலும், அந்தக் குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை ஜூன் 30ம் தேதிக்குள் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க