• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி.மு.க வழக்கு பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

February 22, 2017 தண்டோரா குழு

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் பிப்ரவரி 18 -ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் எடப்பாடி கே. பழனிச்சாமி வென்றார். அதையடுத்து தமிழக முதலமைச்சராக அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு முறையைப் பின்பற்றக் கோரி சட்டப் பேரவைத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்தனர். அதை அவர் ஏற்க மறுத்தார். அதையடுத்து, சட்டப் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதன் பின் தி.மு.க. உறுப்பினர்களை சட்டப் பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, மீண்டும் பிப்ரவரி 27- ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க