• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு

February 15, 2017 தண்டோரா குழு

தான் கடத்தப்பட்டதாக மதுரை தெற்கு எம்.எல்.ஏ. கொடுத்த புகாரின் பேரில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கூவத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சசிகலாவும், எடப்பாடி பழனிச்சாமியும் அடைத்து வைத்திருந்தனர் என்றும் அங்கிருந்து மாறுவேடத்தில் தான் தப்பி வந்ததாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.அதன் அடிப்படையில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள கூவத்தூர் சொகுசு விடுதியில் காஞ்சீபுரம் எஸ்.பி முத்தரசி மற்றும் வடக்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா மற்றும் மீது, ஐ.பி.சி., 342, 343, 365, 353, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க