• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று போலி புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

February 15, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்கத்தில் 3 போலி புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகளை தேசிய புலனாய்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) பறிமுதல் செய்தது. அம்மாநிலத்தின் மால்டா பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்தனர்.

தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“புதிய 2,௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்ததை அடுத்து, போலி 2,௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் வர ஆரம்பித்தன. பல இடங்களிலிருந்து இந்த ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம். ஆனால், அவை தரம் தாழ்ந்தவை. பல ரூபாய் நோட்டுகள் ‘ஸ்கேன்’ செய்த நகல்கள் என்று சோதனையில் தெரிய வந்தது. செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளின் அதிக தரம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது” என்றார்.

போலி இந்திய நாணயத் தாள்கள் (FICN) கடத்திய குற்றத்திற்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உமர் பாருக் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வெளிவந்த தகவலின்படி, “மற்றொரு போலி இந்திய நாணயத் தாள்கள் (FICN) மோசடி நபரிடம் போலி 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளை கொடுக்கச் சென்றபோது உமர் பாருக்கைக் கைது செய்தனர். புதிய 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் கள்ள நோட்டுகளை உருவாக்கப் பின்பற்றப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய வங்க தேசத்தின் எல்லையில் பாதுகாப்புப் படையினர் 40 போலி 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. “செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் எல்லையில் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளை விட தரம் வாய்ந்ததாக இருக்கிறது” என்று அதிகாரி தெரிவித்தார்.

பறிமுதல் செய்த ரூபாய் நோட்டுகளின் தரம் அதிகமாக இருக்கும்போதுதான் தேசிய புலனாய்வு நிறுவனம் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யும். ஆகவே, இதற்கு முன் பறிமுதல் செய்த 2,௦௦௦ ரூபாய் நோட்டுகளின் வழக்கில் சம்பந்தப்படவில்லை.

“போலி இந்திய நாணயத் தாள்கள் (FICN) நாட்டின் எல்லை தாண்டி கடத்தப்படுவதுதான் நவம்பர் 8ம் தேதி 1,௦௦௦ மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட ஒரு காரணம்” என்று இந்திய பிரதமர் வாதிட்டார்.

மேலும் படிக்க