• Download mobile app
25 Aug 2026, TuesdayEdition - 3849
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கிய கோவை இளைஞர்

August 25, 2026 தண்டோரா குழு

கோவை அடுத்த ஏஜி புதூர் பகுதியில், ‘ஓடை வனம்’ அமைப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது விடுமுறை நாட்களில் தூய்மைப் பணிகள், மரம் வளர்ப்பு உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொடர் முயற்சியால் அப்பகுதி பசுமை நிறைந்த சோலைவனமாக மாறி வருகிறது.

கோவை விமான நிலையம் அருகில் இருப்பதால்,அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் விமானங்கள் பறப்பதையும், தரையிறங்குவதையும் ஆர்வத்துடன் பார்த்து வந்துள்ளனர்.ஒரு நாள் தாங்களும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற கனவும் அவர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.இதனை அறிந்த கோவை பட்டணம் பகுதியைச் சேர்ந்த ‘Cars 327’ நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு வேணுகோபால், மாணவர்களின் கனவை நனவாக்க முன்வந்துள்ளார்.

இதன்படி,ஏஜி புதூர் பகுதியைச் சேர்ந்த 36 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளை வரும் 26-ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள முக்கிய இடங்களைச் சுற்றிக் காண்பித்துவிட்டு,அதே நாளில் மாலை விமானம் மூலம் மீண்டும் கோவைக்கு அழைத்து வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களின் விமானப் பயணம் மற்றும் சுற்றுலாவுக்கான அனைத்து செலவுகளையும் ‘Cars 327’ நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.இந்தத் தகவலை அறிந்த மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன், தங்களது நீண்ட நாள் கனவை நனவாக்கிய விஷ்ணு வேணுகோபாலுக்கு நன்றியும் தெரிவித்தனர்.இதற்கான விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு ஏஜி புதூர் ‘ஓடை வனம்’ பகுதியில் நடைபெற்றது. இதில் பசுமை ஏஜி புதூர் தங்கவேல், ‘மரம்’ சண்முகம் மற்றும் ஓடை வனம் அமைப்பின் நிர்வாகிகள் விமான டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த ஏற்பாடுகளை ‘Cars 327’ நிறுவனத்தின் சார்பில் விஷ்ணு வேணுகோபால் மற்றும் மோகன் வேணுகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கனவை உணர்ந்து, அதைச் செயல்படுத்திய இளைஞரின் இந்த முயற்சிக்கு ஏஜி புதூர்–குரும்பபாளையம் பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க