• Download mobile app
01 Jul 2026, WednesdayEdition - 3794
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் கோவை கிளை சார்பில் 78வது பட்டயக் கணக்காளர் தின விழா நடைபெற்றது

July 1, 2026 தண்டோரா குழு

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) தனது 78வது பட்டயக் கணக்காளர் தினத்தை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தென்னிந்திய மண்டலக் குழுவின் கீழ் செயல்படும் ICAI கோயம்புத்தூர் கிளையில் இன்று பல்வேறு சமூகப் பணிகள் மற்றும் விழாக்கால நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர் துடியலூரில் அமைந்துள்ள ICAI பவனில் ICAI கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்னிந்திய ஆடிட்டர்கள் சங்கத்தின் தலைவர் CA. எஸ். வெங்கடேஷ், ICAI கோயம்புத்தூர் கிளைத் தலைவர் CA. சுர்வஜித் எஸ். கிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பட்டயக் கணக்காளர் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, சமூக நலனை கருத்தில் கொண்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், சமூகப் பொறுப்புணர்வின் அடையாளமாக 750-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.இன்று மாலை நடைபெறவுள்ள 78வது பட்டயக் கணக்காளர் தின விழாவில், தொழிலில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த மூத்த பட்டயக் கணக்காளர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இதில் தொழில் துறையின் முன்னோடிகள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்திய பொருளாதார வளர்ச்சியில் பட்டயக் கணக்காளர்களின் பங்களிப்பு அளப்பரியது. நிதி மேலாண்மை, வரிவிதிப்பு, தணிக்கை, நிறுவன ஆளுமை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டயக் கணக்காளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

1949 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ICAI, உலகின் மிகப் பெரிய மற்றும் மதிப்புமிக்க தொழில்முறை கணக்கியல் அமைப்புகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த 78 ஆண்டுகளாக தொழில்முறை திறன், நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொது நலன் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது.

கோயம்புத்தூர் கிளை தற்போது 2,300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கும், 9,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சேவை செய்து வருகிறது. தொழில்முறை மேம்பாட்டு நிகழ்ச்சிகள், மாணவர் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சமூக நலப் பணிகள் மூலம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
“78 ஆண்டுகள் நம்பிக்கை, நேர்மை மற்றும் தேச கட்டமைப்பு” என்ற உயரிய நோக்கத்துடன் ICAI தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க