July 1, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இப்போது வெறும் ஆசையாக மட்டுமல்லாமல்,அது உடனடியாகத் தேவை என்ற ஒன்றாக மாறிவிட்டது.
பல ஆண்டுகளாக பெருநகரங்களில்தான் இதற்கான அதிக வளர்ச்சி இருந்தது. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கான வளர்ச்சி இந்தியாவின் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில்தான் உருவாகப் போகிறது. இங்கு வீடுகளின் தேவையை விட மக்களின் ஆசைகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில்,குறிப்பாக குறைந்த விலை வீடுகளுக்கான தேவை அதிக அளவில் உ உள்ளது. 2024-ம் ஆண்டின் சிஐஐ- நைட் ஃபிராங்க் இந்தியா அறிக்கையின்படி, தற்போது 1 கோடி வீடுகள் பற்றாக்குறையாக உள்ளன.
இது 2030-ம் ஆண்டுக்குள் 3 கோடி வீடுகளாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், வீடுகளுக்கான தேவையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மக்களின் கையில் பணம் அதிகம் புழங்குவது, உள்கட்டமைப்பு வசதிகளின் வளர்ச்சி மற்றும் கொரோனாவுக்குப் பிறகான மக்களின் இடப்பெயர்வு ஆகியவற்றால், தற்போது 60-65% வீடுகளுக்கான தேவை 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் இருந்துதான் வருகிறது.
இந்தத் தேவையின் முக்கிய அம்சம் என்னவென்றால்,முதல் முறையாக வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுதான்.இந்த நகரங்களில் குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்கள் பல தரப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதாவது சம்பளதாரர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சிறு குறு வணிகர்கள் ஆகியோர் ஆவர்.இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான். 2026-ம் ஆண்டிற்குள் ஒரு பெரிய மாற்றம் நடந்துள்ளது: முதல் முறையாக வீடு வாங்குபவர்களில் 64 சதவீதம் பேர் இப்போது 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர் (இது 2019-இல் வெறும் 38 சதவீதமாக மட்டுமே இருந்தது).
மக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும்போதே, மிக சீக்கிரமாகவே சொந்த வீடு வாங்க முடிவு செய்கிறார்கள். சொந்த வீடு என்பது வாழ்க்கையின் கடைசி இலக்கு என்று இல்லாமல், வாழ்க்கையின் ஆரம்ப இலக்காக அது மாறிவிட்டது. வீடுகளை மக்கள் எப்படி வாங்குகிறார்கள் என்பதும் மிக முக்கியமானது. பெரிய பில்டர்கள் ஆதிக்கம் செலுத்தும் பெருநகரங்களைப் போல இல்லாமல், 2 மற்றும் 3- நிலை நகரங்களில் வசிப்பவர்கள் தாங்களாகவே படிப்படியாக வீடுகளைக் கட்டிக்கொள்ள அல்லது தங்களுக்குத் தெரிந்த பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்கவே விரும்புகிறார்கள்.
இந்தியாவில் வழங்கப்படும் பெரும்பாலான வீட்டுக் கடன்கள் ரூ.25 லட்சத்திற்கும் குறைவான வகையில்தான் உள்ளன என்பதைத் தரவுகள் காட்டுகின்றன. இது குறைந்த விலை வீடுகளுக்கான தேவை எந்த அளவில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களில் முழுமையாகச் செயல்படும் நிறுவனங்கள் இந்த வாய்ப்பின் வலிமையை இப்போதே பார்க்கத் தொடங்கிவிட்டன.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில், வீட்டுக் கடன்கள் தொடர்ந்து நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. சமீபத்தில் இதன் அசல் நிலுவைத் தொகையானது ரூ.10,000 கோடியை கடந்துள்ளது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்த இந்த அளவிலான சீரான வளர்ச்சிதான், எதிர்காலத்தில் நிலையான குறைந்த விலை வீட்டுக் கடன்கள் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சிறந்த சான்றாகும். இந்தியாவில் வீடுகளின் தேவை என்பது அந்தந்தப் பகுதிகளைப் பொறுத்தது என்பதைப் புரிந்துகொண்டு, மாநிலம் மற்றும் பிராந்திய வாரியாகச் சொத்து அடமானக் கொள்கைகளைப் பயன்படுத்துவது ஒரு முக்கிய அணுகுமுறையாகும்.
நிலப் பத்திரங்கள், சொத்துக்களின் அமைப்பு மற்றும் ஆவணங்களில் உள்ள வேறுபாடுகளைச் சமாளித்து, வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கவும், அதில் உள்ள அபாயங்களைக் குறைக்கவும் தனிப்பட்ட விதிமுறைகள் தேவைப்படுகின்றன. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்கள், பெண்கள் சொந்த வீடு வாங்குவதை அதிக அளவில் ஊக்குவித்துள்ளன. கடன் வழங்குபவர்கள் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த குறைந்த விலை வீட்டுக் கடன்களை அறிமுகப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
இந்தத் திட்டங்களில் கடனின் அளவு சிறியதாக இருக்கலாம், ஆனால் இது சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் ஒட்டுமொத்தத் தாக்கம் மிகவும் பெரியது. இந்தப் பயணத்தை சாத்தியமாக்குவதில், வீட்டுக் கடன் என்பது வெறும் ஒரு வணிக வாய்ப்பாக மட்டும் இல்லாமல், நீண்டகால மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.