May 6, 2026
தண்டோரா குழு
கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் நேற்று (மே 5) உலக கை சுகாதார தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை ஊழியர்களுக்கு கை சுத்தம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. இது கிருமிகள் பரவுவதைத் தடுத்து, நோயாளிகளின் உயிரைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தகுந்த நேரத்தில் கைகளைச் சுத்தம் செய்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முடியும் என்பதை இந்தத் தினம் வலியுறுத்துகிறது.
இந்த நிகழ்ச்சியை *கேம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி* அவர்கள் தொடங்கி வைத்தார். “கை சுத்தம் என்பது வெறும் ஒரு பழக்கம் மட்டுமல்ல, அது மருத்துவ சேவையின் அடிப்படை. மிகச்சிறிய இந்த செயல், நோயாளிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று அதன் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறினார்.
தொடர்ந்து பேசிய மருத்துவ இயக்குனர் Dr.A .N.முருகன்,மருத்துவமனையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழியர்கள் முறையாகவும், தொடர்ச்சியாகவும் கை சுத்தத்தைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த விழாவின் ஒரு பகுதியாகப் ‘கையெழுத்து இயக்கம்’ நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
மேலும், முறையாகக் கைகளைக் கழுவும் முறைகள் குறித்து ஊழியர்களுக்குச் செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் நோயாளிகளுக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான சிகிச்சையை வழங்க கேம்சிஹெச் நிர்வாகம் தனது அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.