• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரேத்யேகமான நவீன குளியலறை உபகரணங்களின் ‘பர்பிள் பே’ பிரம்மாண்ட புதிய ஷோரூம் துவக்கம்

March 23, 2026 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நவீன குளியலறை உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ‘பர்பிள் பே – பிளிஸ்ஃபுல் பாத்ரூம்ஸ்’ (Purple Bay, Blissful Bathrooms) தனது புதிய பிரம்மாண்ட ஷோரூமை தொடங்கியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம், பாஷ்யகர்லு சாலை (மேற்கு) பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூமை,நிறுவனத்தின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

புதிய இடம்,புதிய அனுபவம் (New Space, New Experience) என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில், சர்வதேசத் தரம் வாய்ந்த நவீன குளியலறை வடிவமைப்புகள்,பிரீமியம் ரக உபகரணங்கள்,பாத் டப்கள், ஹீட் பம்ப் என்னும் நவீன தண்ணீர் சூடு செய்யும் சாதனங்கள், ஸ்டெய்லெஸ் ஸ்டீல் பைப்கள், தண்ணீர் சாப்டனர், மற்றும் வீட்டின் அழகை மேம்படுத்தும் வகையிலான பிரத்யேகக் கட்டமைப்புகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராம் சிவ பிரகாஷ் மற்றும் இயக்குனர் ரம்யா ராம் சிவ பிரகாஷ்,

வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த குளியலறை அனுபவத்தை ஒரே கூரையின் கீழ் வழங்குவதே எங்களின் நோக்கம். கோவையில் பிரேத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த 3 தள ஷோரூம், வாடிக்கையாளர்கள் நேரில் வருகை தரும் போது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, என தெரிவித்தனர்.

இந்தத் திறப்பு விழாவில் நகரின் முக்கியத் தொழில் அதிபர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள் (Architects), பொறியாளர்கள் (Engineers), உள்அலங்கார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க