• Download mobile app
29 Apr 2026, WednesdayEdition - 3731
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மனநலத் துறையின் முதுநிலை மருத்துவர்களுக்கான பயிற்சி தொடக்கம்

March 14, 2026 தண்டோரா குழு

PSG Institute of Medical Sciences & Research மனநலத் துறை மற்றும் Indian Psychiatric Society தமிழ்நாடு கிளை, கொங்குநாடு கிளை இணைந்து நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவர்களுக்கான பயிற்சி தொடக்க விழா கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் சையத் உம்மர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மனநலத் துறை மூத்த ரெசிடென்ட் மருத்துவர் பிரியதர்ஷினி இறை வணக்கப் பாடலை வழங்கினார்.
Indian Psychiatric Society தலைவர் டாக்டர் சி.சாதனந்த் தலைமை உரையாற்றினார்m PSG Institute of Medical Sciences & Research முதல்வர் டாக்டர் டி.எம்.சுப்பாராவ் தொடக்க உரையாற்றினார்.

Indian Psychiatric Society தலைவர் டாக்டர் வை.அருள் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனநல மருத்துவக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.இந்த நிகழ்வில் Indian Psychiatric Society ஆண்டு அறிக்கையை அதன் கௌரவ பொதுச் செயலாளர் டாக்டர் என்.அருண்குமார் வழங்கினார்.

மனநல மருத்துவத்தில் பயிலும் முதுநிலை மாணவர்களின் அறிவையும் மருத்துவத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி திட்டம் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பலவேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர்.

இறுதியாக ஏற்பாட்டுக் குழு செயலாளர் டாக்டர் பிரதீப் பழனியப்பன் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க