• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சென்ட்ரல் தியேட்டர் வளாகத்தை ஜி ஸ்கொயர் குரூப் கையகப்படுத்தியது

December 31, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் குரூப் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘சென்ட்ரல் தியேட்டர்’ வளாகத்தை கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த இடம், கோவையின் மிக முக்கியமான மற்றும் அதிக தேவை கொண்ட பகுதிகளில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கையகப்படுத்துதலின் மூலம், நகர்ப்புறங்களில் உள்ள ப்ரீமியம் நிலங்களை,பொறுப்பான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற வளர்ச்சித் திட்டங்களாக மாற்றுவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையை ஜி ஸ்கொயர் குரூப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

‘சென்ட்ரல் தியேட்டர்’ வளாகத்தை கையகப்படுத்தியது குறித்து ஜி ஸ்கொயர் குரூப் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறியதாவது:

“கோயம்புத்தூர் சென்ட்ரல் தியேட்டர் வளாக இடத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதோடு, நவீன வணிகத்திற்கான அவசியத்தையும், வளாக குடியிருப்புக்கான மதிப்பையும் இணைத்து, மிகவும் பொறுப்புடன் இதனை மீண்டும் கட்டியெழுப்புவதே எங்களின் நோக்கம்.” என்றார்.

மேலும் படிக்க