December 10, 2025
தண்டோரா குழு
கோவை திருச்சி சாலை CSI கிறிஸ்து நாதர் ஆலயத்தின் 2025 வருட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடும் விதமாக சுமார் 600 க்கும் அதிகமான ஏழை எளியவர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
மக்கள் அனைவரும் சந்தோசமாக பண்டிகை கொண்டாடிட வேண்டும் என்ற நோக்கத்தில் 10 வருடங்களுக்கு மேலாக இந்நிகழ்ச்சி செயல்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில்,ஆலய செயலாளர் J.P. ஜேக்கப், பொருளாளர் J.A.பரமானந்தம், REV.சற்குணம்,Rev.சுரேஷ்குமார்,அருண் ஆனந்தராஜ்,ஆடம் அப்பாதுரை S.N.ஜேக்கப் ஆகியோர் கலந்து கொண்டனர்.