November 14, 2025
தண்டோரா குழு
இந்தியாவின் சொந்தமான, தேசிய கொடுப்பனவு கழகத்தின் துணை நிறுவனமான என்பிஎஸ்எல் உருவாக்கிய பிஹிஐஎம் பேமெண்ட்ஸ் ஆப், தமிழ்நாட்டின் பன்முக போக்குவரத்து ஆப் சென்னை ஒன் உடன் இணைந்து, சென்னை பயணிகள் பஸ், மெட்ரோ அல்லது புறநகர் ரயில் டிக்கெட்டை ரூ.1க்கு வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது — ஆனால் பிஹிஐஎம் ஆப்பில் முதல் முறையாக பணம் செலுத்தும் போது மட்டுமே.
சென்னை ஒருங்கிணைந்த நகர்ப்புற போக்குவரத்து ஆணையத்தின் உறுப்புச் செயலாளர் ஜெயகுமார் கூறுகையில் இந்த குறுகிய கால சலுகை, காகிதமில்லா பயணத்தை ஊக்குவித்து, வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், சென்னையின் பொதுப் போக்குவரத்து முறையில் விரைவான பயணத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.
என்.பி.எஸ்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லலிதா நடராஜ் கூறினார்:“பிஹிஐஎம் இந்தியாவின் யூபிஐ புரட்சியைத் தொடங்கியது மற்றும் இன்னும் எளிதான, நம்பகமான பணம் செலுத்தும் வழியாக உள்ளது. சென்னை ஒனில் ரூ 1 டிக்கெட்டுடன், பயணிகள் காகிதத்திலிருந்து கைப்பேசிக்கு, வரிசையிலிருந்து வேகமான நுழைவுக்கு, பணத்திலிருந்து பாதுகாப்பான யூபிஐக்கு மாறுகிறார்கள். பிஹிஐஎம், சென்னையின் நகர்ப்புற பொதுப் போக்குவரத்தைச் சீராக,பாதுகாப்பாக மற்றும் வசதியாக்கும் இந்த முயற்சியில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறது.”
சென்னை ஒன் ஆப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தொடக்க வாரத்தில் 3 லட்சம் புதிய பயனர்கள், 8 லட்சம் பயணத் தேடல்கள் பதிவாகியுள்ளன.முதல் மாதத்திலேயே, 4.5 லட்சம் பதிவுசெய்த பயனர்கள், 3.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.பிஹிஐஎம் உடன் ரூ.1 டிக்கெட் சலுகை, காசில்லா மற்றும் காகிதமில்லா அனுபவத்தை ஒவ்வொரு பயணிக்கும் வழங்குகிறது“சென்னை ஒன் நமது நகரின் போக்குவரத்தை மாற்றி அமைக்கிறது.
பிஹிஐஎம் உடன் ரூ.1 சலுகை மூலம், ஒவ்வொருவரும் பஸ், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் வழிகளில் ஒரே க்யூஆர் மூலம் டிஜிட்டல் டிக்கெட்டை முயற்சி செய்யலாம். இது சென்னைக்கு வேகமான, பணமில்லா பொதுப் போக்குவரத்தில் நம்பிக்கையை வளர்க்கும்.”பிஹிஐஎம் பேமெண்ட்ஸ் ஆப் எளிய, பாதுகாப்பான, நேரடி தேசிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளுக்காகவடிவமைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வங்கிகள் மற்றும் யூபிஐ ஆப்களுடன் இணக்கமானது.அன்றாட பயன்பாட்டை மேம்படுத்த பல புதிய அம்சங்களை இது வழங்குகிறது— யுபிஐ லைட்: வேகமான, பின் இல்லாத சிறுமதிப்புக் கொடுப்பனவுகள், யுபிஐ லைட் எக்ஸ்: இணையம் இல்லாத நிலையில் குறைந்த மதிப்புக் கொடுப்பனவுகள், யுபிஐ டேப் & பே: என்எஃப்சி மூலம் “டாப்” செய்து பணம் செலுத்தும் வசதி.
இவை அனைத்தும் சேர்ந்து பிஹிஐஎமை தினசரி பயணங்களுக்கான நம்பகமான டிஜிட்டல் வழியாக மாற்றுகின்றன. சலுகையைப் பெற பயணிகள் சென்னை ஒன் மற்றும் பிஹிஐஎம் பேமெண்ட்ஸ் ஆப் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.சென்னை ஒன் ஆப்பில் தங்கள் வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, பிஹிஐஎம் வழியாக பணம் செலுத்தும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரச்சாரத்தின் போது முதல் வெற்றிகரமான டிக்கெட் ரூ.1க்கு கிடைக்கும். இந்த சலுகை பயண டிக்கெட்டுகளுக்கே பொருந்தும்; இதை வேறு சலுகைகளுடன் இணைக்க முடியாது.
பிரச்சாரக் காலத்தில், பிஹிஐஎம் ஆப்பின் மூலம் சென்னை ஒன் வழியாக மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த பரிவர்த்தனைகளுக்கு கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படும்