KG சாவடி காவல் நிலைய காவலர்களால் இரவு ரோந்து பணியின்போது மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கையில், சந்தேகத்திற்கிடமான முறையில் தப்பி ஓட முயன்ற இருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், அவர்களிடம் கையுறை, இரண்டு செல்போன்கள் மற்றும் ஸ்க்ரூ டிரைவர் உள்ளிட்ட திருட்டு குற்றங்களில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் விசாரணையில்,அவர்கள் KG சாவடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடமிருந்து ஒரு செல்போனை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் நேர்த்தியுடன் செயல்பட்டு திருடர்களை கைது செய்த KG சாவடி காவல் நிலைய போலீசாரின் பணியை பாராட்டும் வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இன்று (09.06.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில், இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்களை சந்தித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அவர்களது சீர்மிகு பணியை பாராட்டினார்.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்