• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டு அறிவிப்பாணைகள் மத்திய அரசு வாபஸ்

January 24, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டதால் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த இரு அறிவிப்பாணைகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கும் அறிவிப்பாணையை மத்திய அரசு 2016ம் ஆண்டு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணை 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்ட அறிவிப்பாணையை மறுதலித்து வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ஆகும்.

தமிழகத்தில் மக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தமிழக அரசால் மத்திய அரசின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் குறித்த சட்ட முன்வடிவை (புதிய நிரந்தர சட்ட மசோதா) தமிழக அரசு சட்டப் பேரவையில் திங்கட்கிழமை நிறைவேற்றியுள்ளது.

இதனை அடுத்து, மத்திய அரசு கொண்டு வந்த இவ்விரு அறிவிப்பாணைகளுக்கும் தேவையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க