• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ஜல்லிக்கட்டை தடை செய்யாமல் வரைமுறைபடுத்துங்கள்”

January 24, 2017 tamilsamayam.com

ஜல்லிக்கட்டை தடை செய்வதை விட்டுவிட்டு,அதனை வரைமுறைபடுத்த முயற்சி செய்ய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடர்பாக என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு கமல்ஹாசன் அளித்த பேட்டியில்,”ஜல்லிக்கட்டு தமிழரின் பெருமை என கூறப்படுவது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என்றால்,கேரளாவில் கோவில்களில் சாமி சிலையை சுமந்து வரும் யானைகள் துன்புறுத்தப்படவில்லையா?.ஆனால் மத சடங்கு என்ற வரையறைக்குள் கேரளாவில் யானைகளை வளர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டும் கடவுள் நம்பிக்கையோடு இணைந்த ஒரு விளையாட்டுதான்.எனக்கு மத நம்பிக்கை கிடையாது.அதற்காக நான் மட்டுமே நீதி சொல்ல முடியாது.பெரும்பான்மையான மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.சாலை விபத்திலும்,மது அருந்தியும்,போர்களிலும் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழக்கின்றனர்.அதற்காக அவற்றுக்கு தடை கொண்டு வர முடியுமா?

ஜல்லிக்கட்டை தடை செய்யக் கூடாது.அதற்கான விதிமுறைகளை சரியாக வகுத்து வரைமுறைப்படுத்த வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க