• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டு போராட்டம்:பெண்களுக்கு நடமாடும் கழிவறைகளை ஏற்பாடு செய்த லாரன்ஸ்..!

January 20, 2017 tamilsamayam.com

மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பெண்களுக்காக நான்கு கேரவன்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ்,தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்காக உணவளிக்க ஒரு கோடி ரூபாய் அளிப்பதாக கூறி பலரையும் நெகிழச் செய்தார்.

மேலும் அப்போதே குறிப்பிட்ட அளவு உணவுப் பொட்டலங்களை வாங்கி அங்கேயே விநியோகித்தார்.இதனால் சமூக வலைத்தளத்தங்களில் ராகவா லாரன்சின் சேவையை,தமிழ் உணர்வை இளைஞர்கள் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவும் விதமாக,இன்று காலை கழிவறைகள் உள்ள 5 கேரவன்களை நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் கொண்டு வந்தார்.

பொதுவாக வெளியூர் படப்பிடிப்புத் தளங்களில் நடிகர்,நடிகைகள் தங்குவதற்காக இந்த கேரவன் வேன்கள் பயன்படுத்தப்படும்.ஆனால் போராட்ட களத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க பெண்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்ததும்,உடனடியாக சிவலிங்கா படப்பிடிப்புத் தளத்தில் இருந்த 5 கேரவன்களையும் ராகவா லாரன்ஸ் அனுப்பி வைத்ததாக தயாரிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க