• Download mobile app
19 Nov 2025, WednesdayEdition - 3570
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கெயில் எரிவாயு குழாய் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது

January 16, 2017 தண்டோரா குழு

விவசாய பட்டா நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட கெயில் எரிவாய்வு குழாய் திட்டத்தால் பாதிக்கப்படக் கூடிய ஏழு மாவட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி, கருப்பண்ணன், தங்கமணி, அன்பழகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது போல் விவசாய பட்டா நிலங்களில் கெயில் எரிவாய்வு குழாய் அமைக்க தமிழக அரசு அனுமதிக்காது என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள பெட்ரோலியம், மினரல் பைப் லைன் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி, கூட்டத்தில் அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வைப்பதே விவசாயிகளின் முக்கிய குறிக்கோள் இதற்காக வரும்காலங்களில் கடுமையான போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க