• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 3.4 சதவீதம் அதிகரிக்கும்

January 13, 2017 தண்டோரா குழு

2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 3.4 சதவீதம் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) தொழிலாளர்நலத் துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா. சர்வதேச தொழிலாளர் கழகம் (ILO – United Nations International Labour Organization) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு 1.77 கோடிப் பேர் வேலையில்லாதவர்கள். இது 2017ம் ஆண்டில் 1.78 கோடியாக அதிகரிக்கும். 2018 ம் ஆண்டில் இது 1.8 கோடியாக உயரும். சதவீதத்தின் அடிப்படையில் வேலையில்லாத் திண்டாட்டம் 3.4 சதவீதம் அதிகரிக்கும். 2016 ம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாராட்டும்படி இருந்தது. தெற்காசிய நாடுகளில் அதிகபட்சமாக இந்தியாவில் 1,34 கோடிப் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்தாலும், உலக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் வெகுவாக அதிகரிக்கும். 2017 ம் ஆண்டு 5.8 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் 34 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க