• Download mobile app
16 Apr 2026, ThursdayEdition - 3718
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சக வீரர்கள் மீது துப்பாக்கி நடத்தியதில் 3 பேர் பலி

January 12, 2017 தண்டோரா குழு

பிஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை(CISF) வீரர் தன் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இது குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியப்பிரகாஷ் வியாழக்கிழமை (ஜனவரி 12) கூறியதாவது:

நபிநகர் பவர் ஜெனரேஷன் கம்பெனி லிமிடெட் (NPGCL) என்னும் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணியில் இருந்த போது நள்ளிரவு 12.3௦ மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட காவலர் பல்வீர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் நகரத்தை சேர்ந்தவர். இவர் இரண்டு மாதம் யோகா பயிற்சியை முடித்துவிட்டு அண்மையில்தான் பணிக்குத் திரும்பியுள்ளார்.

பணியில் இருந்தபோது விடுமுறை குறித்து எழும்பிய வாக்குவாதத்தில் பொறுமையிழந்த பல்வீர் தன்னுடைய துப்பாகியால் மற்றவர்களைச் சுட்டுள்ளார். அதில் மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்திற்குக் காரணமான பல்வீரைக் கைது செய்துள்ளோம். இச்சம்பவத்தை குறித்து அறிந்ததும் விசாரணை நடத்த மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க