• Download mobile app
19 Aug 2026, WednesdayEdition - 3843
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எல்லையில் ஊருடுவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுகொலை

January 12, 2017 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் கட்டுப்பாட்டு எல்லை வழியாக ஊருடுவ முயன்ற 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இச்சம்பவம் குறித்து இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் புதன்கிழமை (ஜனவரி 11) கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் ஊருடுவ முயன்றதை இந்திய ராணுவத்தினர் மீண்டும் முறியடித்துள்ளனர்.

பீடர் நாலா என்ற பகுதியில் 2 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் ஊருடுவ முயன்றனர். அதை, ராணுவத்தினர் சரியான நேரத்தில் பார்த்து துப்பாக்கியால் சுட்டதில் இரு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.

அவர்களுடைய உடல்கள், ஆயுதங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் ஊருடுவ உடந்தையாக இருந்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் தவறியதில்லை.

ஜனவரி 9ம் தேதி அக்னூர் பகுதி பட்டால் கிராமத்தில் உள்ள பொது ரிசர்வ் பொறியியல் படை முகாம் (GREF) மீது நடத்திய தாகுதலில் 3 கூலி தொழிலார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினர் அதிக விழிப்போடு இருக்கின்றனர். பாகிஸ்தான் ஆதரிக்கும் தீவிரவாத இயக்கத்தை அடியோடு அழிக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க