• Download mobile app
12 Jul 2026, SundayEdition - 3805
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா தந்த கார்: நாஞ்சில் சம்பத் திருப்பி ஒப்படைப்பு

January 3, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா தனக்கு வழங்கிய இனோவா காரை அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலராக இருந்த நாஞ்சில் சம்பத் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) கட்சிக்கே திருப்பி ஒப்படைத்தார்.

ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயாலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012 ஆம் ஆண்டு ம.தி.மு.க வி-லிருந்து விலகி அ.தி.மு.க. வில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த அவருக்கு கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்போது அவரது பிரசார பயணத்துக்காக இனோவா காரைப் பரிசாக வழங்கினார். இந்த காரில் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. பிரசார கூட்டங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

“கடந்த 8 மாத காலமாக பிரசாரம் எதுவும் இல்லை. அதனால், கார் பயன்படுத்தப்படாமல் நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த காரை இன்று நண்பர் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்து விட்டேன். இந்தக் காரைப் பரப்புரைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தேன். சொந்தப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தியதில்லை” என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றதற்கு அவர் அதிருப்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் படிக்க