• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்காவலர் மீது அமிலம் வீசியவர்களைப் பிடிக்க 5 தனிப்படைகள்

December 24, 2016 தண்டோரா குழு

திருப்பத்தூரில் பெண் காவலர் மீது திராவகம் (ஆசிட்) வீசிய மர்ம நபர்களைப் பிடிக்க திருப்பத்தூர் டிஎஸ்பி பன்னீர்செல்வம் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் பெண் காவலர் லாவண்யா மீது வெள்ளியன்று இரண்டு நபர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். அதில் அவரது முகம், வலது கை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து, சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெண் காவலரின் கணவர் உட்பட இருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க