• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வந்தாச்சு பெண்களுக்கான ஐபிஎல்!-பிசிசிஐ

May 18, 2018 tamilsamayam.com

இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் என்பதால் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்ட முதல் இன்று வரை மிக கோலாகலமான வரவேற்பு நீடிக்கிறது.

11வது சீசன் நடந்து வரும் நிலையில் தொடர் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் பிசிசிஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆண் வீரர்களைப் போல,பெண் வீராங்கனைகளை வைத்து ஐபிஎல் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன் தொடக்க நிகழ்வாக மும்பையில் நடக்கும் ஐபிஎல் முதல் தகுதிச் சுற்று போட்டிக்கு முன்பாக அதே மைதானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி நடத்தப்பட உள்ளது.

ஐபிஎல் டிரெயில் பிளேஸர்ஸ்,ஐபிஎல் சூப்பர்நோவாஸ் என இரண்டு பெண்கள் அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா,நியூசிலாந்து,இங்கிலாந்தை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு அணியிலும் தலா 13 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.ஸ்மிரிதி மந்தனா தலைமையில் ஐபிஎல் டிரெயில் பிளேஸர்ஸ் அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் ஐபிஎல் சூப்பர்நோவாஸ் அணியும் விளையாட உள்ளன.

இது பெண்கள் ஐபிஎல் போட்டிக்கு தொடக்கமாகவும், அடுத்தாண்டு ஆண்கள் ஐபிஎல் போட்டி போல, பெண்கள் ஐபிஎல் போட்டி நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க