• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மச்சான் தோனியைப் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது, பிராவோவின் நெகிழ்ச்சி பதிவு

June 24, 2017 தண்டோரா குழு

என் மச்சான் தோனியைப் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிராவோ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அந்த அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20-20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடந்த முதலாவது போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.

இதற்கிடையில், போட்டி தொடங்குவதற்கு முன் வலைப்பயிற்சியில் மேற்கொண்ட இந்திய வீரர்கள் தோனி, பாண்டியாவுடன் பிராவோ உள்ளிட்ட மேற்கித்தியத் தீவுகளின் வீரர்கள் உரையாடிக் கொண்டிருந்த புகைபடம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

அப்பபுகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிராவோ “என் மச்சான் தோனியை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. இரு அணிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஐபிஎலில் சென்னை கிங்ஸ் அணியில் விளையாடிய மேற்கிந்திய வீரர் பிரவோவிற்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். இதனால், பிராவோவின் இந்தப் பதிவுக்குக் கீழ் இந்திய ரசிகர்கள் பலரும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க