March 16, 2018
குளிர்பதன கிடங்கை தனியாருக்கு வாடகை விட்டதை கண்டித்து கோவை உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள் இன்று(மார்ச் 16)போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் பயன்படுத்துவதற்காக குளிர்பதன கிடங்கு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குளிர்பதன கிடங்கை உழவர்களுக்கு பயன்படுத்தாமல் தனியாருக்கு வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து நிர்வாகிகளிடம் பல முறை புகார் அளித்து உள்ளனர்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று திடீரென விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் வியாபாரம் பாதிக்கப்பட்டது.பின்னர் அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குளிர்பதன கிடங்கை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு விடுவதாக கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.