• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆலங்கட்டி மழை மக்கள் மகிழ்ச்சி !

April 20, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை வருகிறது.இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது.இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில்,கோவையில் பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், தடாகம்,புலியகுளம், ராமநாதபுரம், விளாங்குறிச்சி,காந்திரம்,பீளமேடு, விமானநிலையம்உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க