May 22, 2018 தண்டோரா குழு
எஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எஸ் வி சேகர் மீது,சென்னையில் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.இவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியது.ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.இதையடுத்து, எஸ்வி. சேகர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது,
எஸ்.வி.சேகரை கைது செய்ய ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
மேலும், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.