December 9, 2016 தண்டோரா குழு
இறைவன் நீண்ட ஆயுளைத் தரவேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் 7௦-வது பிறந்த நாளையொட்டி வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி தனது 7௦வது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
சோனியா காந்தி நீண்ட நாள் வாழவேண்டும். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் தந்து அவரை அபரிமிதமாக ஆசிர்வதிக்க வேண்டும்.இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
பழைய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்த நாள் முதல் மக்கள் அவதிபடுகின்றனர். இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் இந்த அறிவிப்பு முட்டாள்தனமானது. Paytm பே டு மோடி (Pay to Modi) என்றும் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் 7௦வது பிறந்த நாள் வாழ்த்து பிரதமரிடம் இருந்து வந்து உள்ளது அக்கட்சியினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.