• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குநர் சுசி கணேசன் மீது பெண் எழுத்தாளர் பாலியல் புகார்!

October 16, 2018 தண்டோரா குழு

பிரபல திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

திருட்டு பயலே,கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசி கணேசன்.இவர் மீது பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,

2005-ஆம் ஆண்டு சுசி கணேசனை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிர்காக தான் பேட்டி எடுத்ததாகவும்,பேட்டிக்கு பின்னர் தாம் வீட்டிற்கு புறப்பட்டதாகவும்,அப்போது காரில் வந்த சுசி கணேசன்,வடபழனியில் வீட்டருகே இறக்கி விடுவதாகக் கூறி தம்மை காரில் ஏற்றிக் கொண்டதாகவும்,சிறிது நேரம் பேசிய பிறகு,திடீரென காரின் கதவுகளை அடைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.இயக்குநரிடம் ஆரம்பத்தில் தாம் கெஞ்சிப் பார்த்ததாகவும்.பின்னர் காரின் கதவை உடைத்து விடுவேன் என மிரட்டி ஒரு கட்டத்தில் அலறியதாகவும் தெரிவித்துள்ள லீனா மணிமேகலை,பிறகு தன்னிடம் இருந்த குறுங்கத்தியை காட்டி தப்பிச் சென்றதாக கூறியுள்ளார்.

இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர் சுசிகணேசன்,

லீனா மணிமேகலை- உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.சேற்றில் உருளும் பன்றி,வெள்ளைச் சட்டையோடு சுற்றுபவர்களை பார்த்து எப்படி பொறாமைப்படுமோ அப்படி ஒரு சம்பவத்தை உங்கள் கற்பனைத் திறனோடு ஒரு கதை பண்ணியிருக்கிறீர்கள்.இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நீருபித்துவிட்டீர்கள்…. உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால்,ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ??? அரை மணிப் பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலியே,ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள்,கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது.அவற்றை வெளியிடுவதற்கு முன் – என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன்.

இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற #MeToo -இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் “சமுதாய வைரஸ்களை”-களை களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிற வேறு வழியில்லை.

Social media நண்பர்களுக்கு -தயவு செய்து metoo -இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு தவிறுங்கள்.லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள்- உதவி இயக்குனர்/பாடல் ஆசிரியர்.இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை.குடும்ப வாழ்க்கையில் தோற்று,கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில்,சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரித் துப்பமுடியாமல்,ஏனோ என்மீது வன்மைத்தை துப்பியிருக்கிறார்.கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது.எனது கற்பை சூரையாடியிருக்கிறார்.என் குடும்பம்,வேதனைபோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட் மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள லீனா மணிமேகலை, சுசிகணேசனின் மறுப்பே அவரை காட்டிக் கொடுப்பதாகவும்,அவரிடம் வாய்ப்பு கேட்கும் தேவை தமக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க