• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில்

May 29, 2018 findmytemple.com

சுவாமி : பாண்டவ தூதர் திருக்கோலம் (கிழக்கே திருமுக மண்டலம்).

அம்பாள் : ருக்மணி, சத்யபாமா.

தீர்த்தம் : மத்ஸ்ய தீர்த்தம்.

விமானம் : சக்கர விமானம், வேத கோடி விமானம்.

தலச்சிறப்பு :

இத்தலம் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.இந்த இடம் முன்பு திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இத்தலத்தில் 25 அடி உயரத்தில், மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் புன்னகையோடு காட்சியளிப்பதோடு வேறு எங்கும் காண முடியாத வகையில் அழகுடன் அருள் பாலிக்கிறார்.

கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்குத் தூதுவராக சென்றதால் பாண்டவ தூதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.இங்குள்ள கல்வெட்டுக்களில் இப்பெருமானை தூத ஹரி என்று குறிக்கப்பட்டுள்ளது.இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் புதுப்பிக்கபட்டதாக இங்கு உள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.புதத்தாழ்வார்,பேயாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் புகழ்ந்து பாடிய பேறு பெற்று மங்களாசாசனம் செய்த திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 49 வது திவ்ய தேசம் ஆகும்.

மேலும் படிக்க