• Download mobile app
14 Mar 2026, SaturdayEdition - 3685
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில்

May 18, 2018 findmytemple.com

சுவாமி : பகவதி அம்மன்.

தலச்சிறப்பு : பகவதி அம்மனை வழிபடும்போது,பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.வாழைப்பழ அபிஷேகம் செய்தால்,சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும்.பலாப்பழ அபிஷேகம் செய்தால், நினைத்தது நடக்கும்.மாம்பழ அபிஷேகம் செய்தால், குழந்தை பாக்கியம் கிட்டும்.மாதுளம்பழ அபிஷேகம் செய்தால்,கோபம் தீரும்.எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால்,பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

“எங்கும் நிறைந்த பரம்பொருளை,தீபச் சுடராகக் கண்டு வழிபடுவதால்,வாழ்வில் துன்ப இருளை அகற்றி இன்ப ஒளி ஏற்றலாம்” என்பது சான்றோர் கருத்துப்படி நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ பகவதி அம்மன் அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோவில் முகவரி : அருள்மிகுபகவதி அம்மன் திருக்கோவில்,பம்பப்படையூர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க