• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சாய் பாபா திருக்கோவில்

June 28, 2018 findmytemple.com

சுவாமி:சாய் பாபா.

தலச்சிறப்பு:இக்கோவிலில் துனி என்கிற அணையாத புனித நெருப்பு உள்ள இடம் நவீன மயமாக்கப்பட்டு உள்ளது.மற்ற பாபா கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு என்னவென்றால் நீங்களே சன்னதியில் பாபாவின் வெண்பளிங்குச் சிலையை தொட்டு வணங்கலாம்.மாலை, சால்வைகள் சார்த்தலாம்.அவர் பாதங்களை தொட்டு கீழே விழுந்து வணங்கலாம்.கோவிலில் நுழைந்து அவர் சன்னதி முன் நிற்கும் போது ஒரு தெய்வீக அலையை,உணர்வை நிச்சயம் அனுபவிக்கலாம்.

பாபாவின் சன்னதி,துவாரகாமாயி அனா,குருஸ்தான் மற்றும் பின்புறம் உள்ள நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியை உள்ளடக்கிய ஹால் ஆகியவை கண்ணிற்கும்,கருத்திற்கும் விருந்தாக புதுப்பொலிவுடன் திகழ்கிறது.நரசிம்ம ஸ்வாமிஜியின் சமாதியின் மேல் உள்ள வெண் பளிங்குச்சிலை அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன பாபாவின் உற்சவ மூர்த்தி ஆகியவை மனதில் பக்தி பரவச மூட்டும் வகையில் அமைந்துள்ளது.

தல வரலாறு:இக்கோவில் சீரடி சாய்பாபா மீது கொண்ட பக்தியினால் ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி அவர்களால் 1941 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.சீரடி சாயிபாபாவை பற்றி பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த இவர் பாபா பற்றியும்,அவரது உபதேசங்களையும் கட்டுரையாக எழுதி உள்ளார்.இவரது அரிய முயற்சியால் உருவான ஆலயம் இன்று அதி நவீன வளர்ச்சி அடைந்துள்ளது.

நடைதிறப்பு:காலை 5.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை,மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் முகவரி:அருள்மிகு சாய் பாபா திருக்கோவில்,51B, V C கார்டன் தெரு, அலமேலு மங்கபுரம்,மயிலாப்பூர்,சென்னை – 600 004.

மேலும் படிக்க