• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்

July 16, 2018 findmytemple.com

சுவாமி:சப்தரிஷீஸ்வரர் (சிவன்).

அம்பாள்:பெரிய நாயகி,மகாலட்சுமி,பைரவி (காளி).

மூர்த்தி:தட்சிணாமூர்த்தி,அர்த்தநாரீஸ்வரர்,பிட்சாடனர்.

தலச்சிறப்பு:மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவாக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். அழகிய சுயம்பு லிங்கம் மேற்கு பார்த்த சந்நதி.திருத்தவத்துறை நாதர் மற்றும் தேஜோவிடங்கர் ஆகிய திரு நாமங்களும் உண்டு.அம்பாள் மஹா சம்பத் கௌரி எனப்படும் பெரிய நாயகி கிழக்கு பார்த்து எழுந்தருளி,தனி சந்நதி கொண்டுள்ளார்.மகாலட்சுமி,பிட்சாடனர்,அர்த்தநாரீஸ்வரர்,பைரவி எனப்படும் காளி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி,சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி.இவரை “வீணா தட்சிணாமூர்த்தி” என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது.சிவன் இசையின் தலைவன்.அதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும்,கைகளில் வீணையோடும்,நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி.இத்தல தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து,குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது.வினை தீர்க்கும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வளங்கள் பலவும் பெறலாம்.

இங்கு சற்றே வித்தியாசமான கோணத்தில் நவகிரக சந்நிதி வடிவமைக்கப் பெற்றுள்ளது.இத்தலத்தில் சூரிய பகவானை நோக்கி நவகிரக சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.தோஷங்களால் பாதிக்கப்பட்டோர் நெய் விளக்கேற்றியும்,விசேஷ பூஜைகள் செய்தும்,நவகிரக சந்நிதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.இதனால் சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது நம்பிக்கை.

அருகிலுள்ள நகரம்:திருச்சி.

கோயில் முகவரி:அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்,லால்குடி,திருச்சி. மாவட்டம்.

மேலும் படிக்க