• Download mobile app
14 Dec 2025, SundayEdition - 3595
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு கைலாசநாதர்(சந்திரன்) திருக்கோவில்

February 1, 2019 www.findmytemple.com

சுவாமி : கைலாசநாதர்.

அம்பாள் : பெரியநாயகி.

தீர்த்தம் : சந்திர தீர்த்தம், காவிரி ஆறு.

தலவிருட்சம் : வில்வம்/வாழை.

தலச்சிறப்பு : சூரிய, சந்திரன் ஆகியோர்களுக்கு தனி சன்னதி உண்டு. கோள்கள் சூரியனை பார்த்தவாறு அமைந்து உள்ளது. பங்குனி உத்திரம் நாளன்று காலை 6 மணிக்கு இறைவன் மீது சூரிய ஒளியும், மறுநாள் மாலை சந்திர ஒளியும் படரும். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. தமிழகத்தில் அன்னப் பிரசாதத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும். நீர் தொடர்பான நோய்களுக்கு இவரே காரணம் ஆவார். காலரா, நுரையீரல் நோய்கள் போன்றவை நீங்க இவரை வழிபடலாம். வெண்மை நிற மலர்களால் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற ஆடைகள் உடுத்தி, முத்து மாலை அணிந்து, பெளர்ணமி விரதம் இருந்து வழிபடலாம்.

தல வரலாறு : இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின் பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். அப்பூதியடிகள் என்ற 63 நாயன் மார்களில் ஒருவரான இவர் திங்களூரை சேர்ந்தவர். இவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார்.

ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப் பட்டு அவரை காண சென்றார். திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவு அளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.

தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டால் திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்று என்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவு அளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார். இதுவே இக்கோவில் வரலாறு ஆகும்.

மேலும் படிக்க