• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு ஆளுடையார் திருக்கோவில்

September 29, 2018 findmytemple.com

சுவாமி:ஆளுடையார்.

அம்பாள்:மைவிழியாள்,பாலாம்பிகை.

தலச்சிறப்பு:இக்கோவில் மலையை செதுக்கி உயரமான மலை மேல் அமைக்கப்பட்டுள்ளது ஆலயம்.கருவறையில் இறைவன் ஆளுடையார்,லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.இவருடைய திருமேனி எட்டரை அடி உயரத்தில்,பிரம்மாண்டமாக, அழகிய திருக்கோலத்துடன் அமைந்திருப்பதும் மற்றும் இங்கே அம்பாளுக்கு இரண்டு சந்நிதிகள் இருப்பது சிறப்பாகும்.கிழக்கு நோக்கி இருக்கும் சந்நிதியில் அம்பாளுக்கு அஞ்சனாக்ஷி என்றும் தூய தமிழில் மைவிழியாள் என்றும் அழைக்கப்படுகிறாள்.கண்களுக்கு மை தீட்டிய அந்தக் கருணைக் கடல்,தமது ஒரு கண்ணால் பக்தர்களின் தீமைகளை அழித்து,மறு கண்ணால் நன்மைகளைப் பொழிகிறாள்.மேற்கு நோக்கி இருக்கும் மற்றொரு சந்நிதியில் பாலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பிகை அருள்பாலிக்கிறாள்.தெற்கில் தட்சிணாமூர்த்தியும்,கிழக்கில் பெருமாளும்,வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க,விஷ்ணு துர்க்கையின் எதிரே சண்டீஸ்வர சன்னதி, ஆஞ்சநேயர்,விநாயகர் சன்னதிகளும் உள்ளன.முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபம்,நடுவே பிரமாண்டமான நந்தி மண்டபமும் உள்ளது.

அருகிலுள்ள நகரம்:திருச்சி.

கோயில் முகவரி:அருள்மிகு ஆளுடையார் திருக்கோவில்,உய்யக்கொண்டான் திருமலை,திருச்சி மாவட்டம்.

மேலும் படிக்க