இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.கடந்த 1991ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரையில் 34 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.இந்நிலையில்,இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயர்களை விளையாட்டுத் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மேலும்,இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு
சத்குரு தொடர்பான போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை
சிறுமுகை பகுதியில் திருட்டு நடைபெறுவதை தடுத்த காவலர்களுக்கு கோவை எஸ்.பி பாராட்டு