• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செரினா வில்லியம்ஸூக்கு ரூ. 12 லட்சம் அபராதம்

September 10, 2018 தண்டோரா குழு

நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸூக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 138வது யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடைப்பெற்றது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் நயோமி ஒசாகா விளையாடினர்.இதில் நயோமி ஒசாகாவிடம் செரினா வில்லியம்ஸ் 2-6, 4-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.இதன் மூலம் ஜப்பானின் நயோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில்,நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட செரினா வில்லியம்ஸூக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதில் ரூ.2,88,860 வெளியில் இருந்து பயிற்சி பெற்றதுக்காகவும்,ரூ.2,16,645 டென்னிஸ் ராக்கெட்டை வீசியதற்காகவும்,ரூ.7,22,150 சேர் நடுவரை திருடன் என்று கூறியதற்காகவும் என மொத்தமாக ரூ. 12,27,655 அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு அபராதம் விதித்துள்ளது.

மேலும் படிக்க