• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்த விஷயத்துல கோலி அதிர்ஷ்டசாலி தான் : சச்சின்!

January 3, 2018 tamil.samayam.com

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு கிடைக்காத வாய்ப்பு கோலிக்கு கிடைத்துள்ளது உண்மையிலேயே அதிர்ஷ்டமான விஷயம் தான்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 5ல் கேப்டவுனில் துவங்குகிறது.

இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இத்தொடர் குறித்து கணித்துள்ள ஜாம்பவான் சச்சின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு கிடைக்காத் வாய்ப்பு கோலிக்கு கிடைத்துள்ளது அதிர்ஷ்டம் தான் என்றார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில்,தற்போது தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணியில், மூன்று முழு நேர வேகப்பந்து வீச்சாளர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் சிறந்த மிடில் ஆர்டர் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் இடம் பெற்றுள்ளார். அவரை நான்காவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்தும் வாய்ப்பு கோலி உள்ளது. கபில் தேவ் காலத்தில் கூட இந்திய அணியில் இப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வாய்ப்பு கிடைக்க கோலி உண்மையிலேய அதிர்ஷ்டசாலிதான். அதனால் இத்தொடர் நிச்சயமாக கடும் சவாலாக அமையும் .என்றார்.

மேலும் படிக்க