• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரசிகரை அடித்து உதைத்த கிரிக்கெட் வீரர்

December 30, 2017 tamil.samayam.com

ரசிகரை தேடிச்சென்று தாக்கிய விவகாரத்தில் சில போட்டிகளில் விளையாட வங்கதேச வீரர் சபீர் ரஹ்மானுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

வங்கதேச அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருபவர் சபீர் ரஹ்மான். இவர் சமீபத்தில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜ்ஷாஹி டிவிசனுக்காக விளையாடினார். போட்டியின் போது ஒரு ரசிகர் கத்திக்கொண்டே இருந்துள்ளார்.

கடுப்பான சபீர், நடுவரின் அனுமதியின்றி ரசிகர்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு சென்று அந்த ரசிகரை தாக்கியுள்ளார். இதை கவனித்த மூன்றாவது நடுவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து அந்த வீரரின் ஒழுங்கின்மை குறித்து புகார் பதிவானது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இவரின் நடவடிக்கையால் அடுத்த சில சர்வதேச போட்டிகளில் விளையாட சபீர் ரஹ்மானுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க