December 27, 2017
tamil.samayam.com
தென் ஆப்ரிக்க அணிக்கு இந்தியாவின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா வெயிட்டான வார்னிங் கொடுத்துள்ளார்.
இந்தியா வந்த இலங்கை அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று தொடர்களையும் இழந்து வெறும்கையுடன் நாடு திரும்பியது. இத்தொடரில் இலங்கையின் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் நிக் போதஸ் இருந்தார்.
இந்நிலையில் இத்தொடரை தொடர்ந்து தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்க மண்ணில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இதுவரை தொடரை கைப்பற்றியதே இல்லை.
இந்த வரலாற்றை இளம் கோலி தலைமையிலான இந்திய அணி மாற்றி எழுதும் என பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில்,
“இந்திய அணி வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை தற்போதைக்கு அசைப்பது மிகவும் கடினம். தென் ஆப்ரிக்காவில் வெற்றி பெற மட்டுமே இந்திய அணி செல்கிறது. டிரா செய்யவோ தோல்வியை சந்திக்கவோ செல்லவில்லை.” என்றார்.