• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.டி.பி. சேலஞ்ஞர்: 2வது பட்டம் வென்றது பயஸ் – ராஜா இணை

November 21, 2017 tamilsamayam.com

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நாக்ஸ்வில் நகரில் நடைபெற்றது. இத்தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா இணை தென் ஆப்ரிக்காவின் ருயன் மற்றும் பிரிட்டனின் ஜோ ஷாலிஸ்பரி இணையை எதிர்கொண்டது.

இதில் முதல் செட்டை பயஸ் ஜோடி 6–3 எனக் கைப்பற்றியது. பரபரப்பாகத் தொடர்ந்த அடுத்த செட்டை 6–7 என தவறவிட்டது. மீண்டும் உத்வேகம் பெற்று மிரட்டிய பயஸ் ஜோடி கடைசி செட்டை 10–5 வென்றது. ஒரு மணி நேரம் 44 நிமிடங்கள் வரை இந்த ஆட்டம் நீடித்தது.

இறுதியில், பயஸ் – புரவ் இணை 6–3, 6–7, 10–5 என்ற செட் கணக்கில் வென்று கோப்பை தனதாக்கியது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தொடரில் பட்டம் வென்ற சாதனையையும் இந்திய இணை நிகழ்த்தியுள்ளது. இந்த ஆண்டில் பயஸ் வென்ற 5வது ஏ.டி.பி., தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க