January 11, 2018
tamil.samayam.com
தோனி தான் சிறந்த கேப்டன் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎலின் 11வது ஆண்டு தொடர் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்காக வரும் 27, 28 ஆகிய தேதிகளில் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகிய 3 பேர் திரும்ப பெறப்பட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரெய்னா, தல தோனி தான் சிறந்த கேப்டன் என்றார். கடந்த 8 ஆண்டுகளாக தோனியும், நானும் விளையாடியுள்ளோம். தோனி எங்களுக்கு மிகப்பெரிய பலம். என்னுடைய அனுபவம் மெருகேறியதும் இங்கு தான். சென்னை சூப்பர் கிங்ஸின் அனைத்துப் போட்டிகளுக்கும் ரசிகர்கள் அளவு கடந்த அன்பை வாரி வழங்கியுள்ளனர்.