சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து வெளியேறினார்.
சிங்கப்பூரில் ஆண்டு தோறும் பாட்மிண்டன் தொடர் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடக்கிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி .வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.
இதில் துவக்கம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து முதல் செட்டை 11-21 என இழந்தார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டிலும் எழுச்சி பெற தவறிய சிந்து, அந்த செட்டையும் 14-21 என கோட்டைவிட்டார்.
முடிவில், இந்தியாவின் பி .வி.சிந்து, ஸ்பெயினின் கரோலினா மரினிடம் 11-21, 14-21 என்ற செட்களில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
சாய் பிரனீத் அசத்தல்:
இதே போல ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், தாய்லாந்து வீரர் தாங்கோசாக்கை எதிர்கொண்ட இந்தியாவின் சாய் பிரனீத் 21-15, 14-21, 19-21 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்
கோவை வடவள்ளியில் பிரீத்வெல் கிளினிக் நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு தொடர்பான சிகிச்சை மையம் புதிதாக தொடக்கம்