• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சோயிப் மாலிக் – சானியா மிர்சா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

October 30, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.இவர் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியும்,இரட்டையர் பிரிவு தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார்.இருப்பினும் அவர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடி வருகிறார்.இதற்கிடையில்,கடந்த ஏப்ரல் மாதம் சானியா மிர்சா தான் கர்ப்பமுற்று இருப்பதாக தகவல் வெளியிட்டார்.

இந்நிலையில்,சோயிப் மாலிக் – சானியா மிர்சா ஜோடிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.இதனை சோயிப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.இதையடுத்து,சானியா மிர்சா- சோயிப் மாலிக்கிற்கு டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க