• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நம்பிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருங்கள்: கேரளா மக்களுக்காக குரல் கொடுத்த கோலி!!

August 18, 2018 tamilsamayam.com

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஆதரவாக,இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது.இதனால்,மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு நாளை வரை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளாவில் கனமழை பெய்துள்ளது.தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 போ் உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்து 23 ஆயிரத்து 139 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.80 அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரக்கூடிய நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி கேரளா வெள்ளப்பெருக்கு குறித்து ட்விட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.அதில்,“கேரளாவில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்,முடிந்தவரை அனைவரும் தங்கள் வீட்டிலே இருக்கவும்.விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புகிறேன்.மேலும்,இந்த மோசாமான சூழலில்,தங்களின் முழு ஆதரவையும் வழங்கிய இந்திய ராணுவத்திற்கும்,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கையோடும்,பாதுகாப்போடும் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க