• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை அணிக்கு 5வது வெற்றி

December 29, 2017 tamil.samayam.com

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடாின் லீக் சுற்று ஆட்டத்தில் ஜேம்ஷெத்பூா் அணியை சென்னை எப்.சி. அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி 5வது வெற்றியை பதிவு செய்தது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 4வது இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு ஜேம்ஷெத்பூாில் நடைபெற்ற 33வது லீக் போட்டியில் சென்னை எப்.சி. அணியும், ஜேம்ஷெத்பூா் எப்.சி. அணியும் மோதிக் கொண்டன.

இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்ட நட்சத்திர ஆட்டக்காரா் ஜேஜே கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தின் முடிவில் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில், 16 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டது.

மேலும் படிக்க