• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டைமண்ட் லீக் தடகளத்துக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி!

July 28, 2018 tamilsamayam.com

டைமண்ட் லீக் தடகள பைனல் போட்டிக்கு இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் வரும் 30ம் தேதி டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட டைமண்ட் லீக் தடகள பைனல் போட்டிகளின்,13வது சுற்று போட்டிகள் இதுவாகும்.

இதன் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். இவரைத்தவிர்த்து,உலக சாம்பியன் ஜோஹானஸ் வெட்டர்,ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோஹ்லர், டைமண்ட் லீக் சாம்பியன் ஜாகப் வாடெஜ்,ஜெர்மனி சாம்பியன் ஆண்டிரஸ் ஹாப்மேன், எஸ்தோனியன் சாதனையாளர் மாக்னஸ் கிர்ட் ஆகியோரும் தங்கள் இடத்தை உறுதி செய்தனர்.எஞ்சியுள்ள 2 இடங்கள், ஃபைனல் போட்டிக்கு முன்பாக நடக்கும் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யப்படும்.

இந்நிலையில் அடுத்த மாதம் இந்தோனேஷியாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க